Sunday, January 22, 2012

நல்ல சொற்கள்.

நல்ல சொற்கள்.
நல்ல சொற்களைச்  சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அதற்கு நமது காதுகளில் நல்ல சொற்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.
என் தாயார் சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு கிளி வியாபாரி கிளி விற்றுக் கொண்டு சென்றான்.அவ்வூரில் இருந்த கசாப்புக் கடை வைத்திருக்கும் குப்பன் ஒரு கிளியை வாங்கினான். அதை தன் கடையின் முன் கட்டித் தொங்க விட்டான்.அந்தக் கிளியும் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தது.சிலநாட்கள் கழித்து கிளி வியாபாரி இன்னொரு கிளியை ஒரு ஆசிரமம் வைத்து நடத்தும் ஒரு முனிவரிடம் விற்றான்.அந்த ஆசிரமவாசியும் அந்தக் கிளியை ஆசிரமத்தின் முன் பகுதியில் தொங்கவிட்டார். அந்தக் கிளியும் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தது.
சில நாட்கள் கழித்து கிளி வியாபாரி தான் விற்ற கிளிகளைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தான்.
முதலில் கசாப்புக் கடைக்குச் சென்றான். அங்கே இருந்த கிளியிடம் சென்று" எப்படி இருக்கிறாய் கிளியே?"என்று அன்புடன் கேட்டான்.
அதற்கு அந்தக் கிளி "டேய் இவன் காலை ஓடி. கழுத்தை வெட்டு என்று மிகவும் கடுமையாகப் பேசியது.
அதே சமயம் கடை முதலாளியும் தன் வேலையாட்களிடம் எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கிளி வியாபாரி வருத்தத்துடன் வெளியேறினான்.
பின்னர் நேராக முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். உள்ளே நுழைந்தவுடன் "வாருங்கள். நலமா? அமருங்கள். ஏதேனும் பழங்கள் உண்ணுங்கள்" என்ற அன்பான சொற்களைக் கேட்டு மகிழ்ந்தான் வியாபாரி..
அப்போது உள்ளே நுழைந்த முனிவர்,அன்பாக உபசரித்து பழங்கள் உண்ணக் கொடுத்தார்.இப்போது வியாபாரி புரிந்து கொண்டான்.கசாப்புக் கடையில் பேசும் சொற்களை அங்கிருக்கும் கிளி  கற்றுக் கொண்டது. முனிவரின் அன்புச் சொற்களை இங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது.அதனால் எங்கே நல்லன பேசப்படுகிறதோ அங்கே நாம் இருந்தால் நமக்கும் அதே சொற்கள் தான் பேச வரும் எனவே நல்லதையே நாடவேண்டும் என்று சொன்னார்கள்.
அவரது அனுபவமிக்க சொற்கள் நமது வாழ்க்கைக்கே ஒரு நல்ல பாடமல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Saturday, January 14, 2012

vaazhththu.

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com