Wednesday, June 13, 2012

21- அவசரகாலம்

அமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார் அறுபது மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.காரோட்டி வந்த  என் மகள் சட்டென வண்டியை  ஓரமாக நிறுத்தி விட்டாள். போலீஸ் வண்டி, ஒரு ஆம்புலன்ஸ், ஒரு தீயணைக்கும் வண்டி ஆகியன எங்களைக் கடந்து சென்றன.அதற்குள் எங்களைச் சுற்றி நான்கு சாலைகளிலும் நூற்றுக் கணக்கான வண்டிகள் வரிசையில் நின்றிருந்தன.
எங்கோ விபத்து நேர்ந்துள்ளது.அதற்கு உடனடியாக போலீஸ்  உதவி செல்கிறது அதற்கு நாங்கள் முதலில் வழி விட்டுதான் ஆகவேண்டும்.என்ற அவள் செய்தியை கேட்டபோது பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு  வந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது.
என் உறவினர் ஒருவர் மிகவும் நலமாக இருந்தவர் எந்த நோயும் இல்லாதவர்.நன்றாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று மார்பு வலிக்கிறது என்றார்.அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து சற்றுத் தொலைவில் இருந்த மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார்கள்.ஆனால் வழியில் போக்குவரத்தில் நெரிசல் (டிராபிக் ஜாம்) ஏற்பட்டதால் வண்டிகள் நகர இயலவில்லை.ஒரே சத்தம். ஆம்புலன்சுக்குள்ளே மரணத்தோடு போராடும் நோயாளி. வெளியே கார்கள் நகர முடியாமல் போடும் சத்தம். கணவரின் உயிர் பிரிவதைப் பார்த்து மனைவி துடிப்பு. அரைமணி நேரம் கழித்து அந்த நண்பரை மருத்துவ மனைக்குள் அழைத்துச் செல்லும்போது அவர் உயிர பிரிந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. இந்நேரம் அமெரிக்காவாக இருந்திருந்தால் அந்த நண்பரின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கும்.
இந்த நிலைக்கு யார் காரணம்? எது காரணம் ?என்னகாரணம்?பொதுமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். இதற்கொரு வழி காண வேண்டும்
அவசர காலத்திற்கென்று வண்டி இருப்பது போல் வழியும் இருக்கவேண்டும்.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. நல்ல சிந்தனை. இங்கேயும் ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறது. ஆனாலும் சட்டத்தினை தான் யாரும் சட்டை செய்வதில்லையே... :(

    நல்ல பகிர்வும்மா...

    ReplyDelete