Sunday, December 30, 2018

பாட்டி சொன்ன கதைகள் -நரியும் கொக்கும்

              ஒரு காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது.அந்தக் காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. எல்லா விலங்குகளும் அந்தக
 குளத்திற்கு  தண்ணீர் குடிக்க வந்து போகும்.அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருந்ததால் பறவைகளும் நிறைய வந்து மீனைக் கொத்திச் செல்லும்.
           அந்தக் காட்டுக்கு ஒரு பெரிய கொக்கு வந்து ஒரு காலில் நின்று மீனுக்காகக் காத்திருந்தது.நிறைய சின்ன மீன்களைப் போக விட்டு விட்டுப் பெரியமீனுக்காகக் காத்திருந்தது.அந்த சமயம் ஒரு நரி தண்ணீர் குடிப்பதற்காக அந்தக் குளத்தருகே வந்தது .தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தது அங்கு ஒரு பாறையின் மேல் கொக்கு கண்களைமூடித்  தவம் செய்வது போல் நின்றிருந்தது.
           அதைப் பார்த்த நரிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
அது கொக்கைப் பார்த்துக் கேட்டது.
"கொக்காரே, உம்மைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.என் வீட்டில் உமக்கு விருந்து வைக்க எண்ணுகிறேன்.
தவறாமல்  வாருங்கள்."
சற்றே கண்ணைத் திறந்து பார்த்த கொக்கு,,"உமது நல்ல குணத்துக்கு மிகவும் மகிழ்ச்சி.கட்டாயம் வருகிறேன்"என்றது. ஆனால் மனதுக்குள் இந்த நரி எல்லாரையும் ஏமாற்றுகிறதே.இதை நாம் பழிவாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டது.
"நாளைக்கே என் வீட்டுக்கு வாருங்கள் கொக்காரே."என்றது நரி 
"முதலில் என் வீட்டுக்கு வாருங்கள் நரியாரே,. அடுத்த நாள் உங்கள் வீட்டுக்கு நான் வருகிறேன்."
"ஆஹா, அப்படியே நாளைக்கே வருகிறேன்"நரி மகிழ்ச்சியோடு சென்றது 
                  மறுநாள் சொன்னபடியே  நரி அந்தக் குளத்தின் கரையில் காத்திருந்தது.நீண்ட கால்களை வீசிப் போட்டு அங்கே வந்தது.கொக்கு 
"வாருங்கள் நரியாரே போகலாம்"என்று தன இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது அங்கே போனபின்னர் நரிக்குத்  திகைப்பு ஏற்பட்டது . இரண்டு நீண்ட மூக்கு ஜாடியில் பாயசம் இருந்தது. கொக்கு தன மூக்கை உள்ளே விட்டு பாயாசத்தைக் குடித்தது.நரி குடிக்க முடியாமல் திகைத்ததைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நகைத்தது. நரியாரும் அமைதியாக "கொக்காரே, நீங்கள் நாளைக்கே என் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும். என்றதும் கொக்கு மகிழ்ச்சியுடன் சரி வருகிறேன் என்றதுடன்,
நரியாரே  பாயசம் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? என்றது கிண்டலாக.
"ஆமாம், ஆமாமரொம்ப ஜோராக இருக்கிறது."என்றபடியே விடை பெற்றது நரி. 
நரியை ஏமாற்றியதை எல்லாவிலங்குகளிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டது கொக்கு.

               மறுநாள் கொக்கு மிகவும் ஆவலுடன் நரியின் இருப்பிடம் சென்றது." வாருங்கள் கொக்காரே,என்று வரவேற்றதுடன் அங்கே இருந்த விருந்தைக் காட்டி பாருங்கள் உங்களுக்காக நானே இனிப்பான பாயசம் தயாரித்துள்ளேன் எனக்கு நாக்கில் நீர் ஊறுகிறது.சாப்பிடலாம்."என்று முன்னே தட்டில் இருந்து பாயசத்தை நக்கி நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.
              பெரிய தட்டில் இருந்த பாயாசத்தைக் குடிக்க முடியாமல் கொக்கு திகைத்து நின்றது.ஆனால் நரியோ வேகவேகமாக தட்டில் இருந்த பாயசத்தை  குடிக்க அதைப் பரிதாபமாகப் பார்த்தபடியே தலை குனிந்து நின்றது கொக்கு.

தான் நரியை ஏமாற்றியதாக எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டதை எண்ணி இப்போது  வருத்தப் பட்டது கொக்கு 
அப்போது நரி "கொக்காரே, என்னை விருந்துக்கு அழைத்து நீர் அவமானப் படுத்தினீர் அதற்காகவே நானும் இப்படி செய்தேன்.
வருத்தப் படாதீர்கள். செய்த தவறை எண்ணி வருந்துகிறீர்கள் என்று தெரிகிறது.இந்தாருங்கள் சாப்பிடுங்கள்"என்றபடியே மறைவிலிருந்து ஒரு நீண்ட மூக்கு ஜாடியைக் கொடுத்தது. அதில் இருந்த பாயசத்தை கொக்கு அருந்தி மகிழ்ந்தது." நரியாரே , நீர் மிகவும் நல்லவர். தெரியாமல் நான் செய்த தவறை மன்னியுங்கள் இனி நாம்  நண்பர்கள்."
நரியாரும் மிகவும் சந்தோஷம் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பியது.பாயசம் குடித்த மகிழ்ச்சியில் நீண்ட தன காலை வீசிப் போட்டு குளத்தை நோக்கி நடந்தது கொக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------------










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, November 8, 2018

பாட்டி சொன்ன கதை.

அருமைக் குழந்தைகளுக்கு பாட்டியின் தீபாவளி நாள் வாழ்த்துகள்.
இதுவரை பெரிய குழந்தைகளுக்குக்  கதை சொல்லி வந்த பாட்டி இனி சின்னப்  பாப்பாவான  உங்களுக்கு தாத்தா பாட்டி சொன்ன கதைகளை  நான் சொல்லப் போகிறேன்.பழைய கதை என்றாலும் புதிதாய்க் கேட்கும் உங்களுக்குப்  பிடிக்கும் என நம்புகிறேன்.

                               துஷ்டரைக் கண்டால் தூரவிலகு 

     ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன.ஒரு சமயம் சில வேட்டைக்காரர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர்.அவர்கள் ஒரு புலியைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்து விட்டனர்.இன்னும் சில விலங்குகளைப்  பிடிக்கக் காட்டுக்குள் சென்று விட்டனர்.புலி உறுமியபடியே கூண்டுக்குள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தது.அப்போது அந்த வழியாக ஒரு அந்தணர் வந்தார். அவர் தன ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குப் பூஜை செய்யப் போய்க்கொண்டிருந்தார்.
         அவர் புலியைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கி நின்றார்.அவரைப் புலி பார்த்தது.தன அருகே வருமாறு அழைத்தது.அந்தணர்"நீ என்னைத்   தின்று விடுவாய்.நான் வரமாட்டேன்."என்றார் பயத்துடனேயே.
ஆனால் புலியோ சாதுவாகத் தன முகத்தை வைத்துக் கொண்டு "
"என்னைப்  பார். எனக்கோ வயதாகிவிட்டது பல்  இல்லை நான் எப்படி உன்னைக் கடிப்பேன்?நான்  இப்போது சைவம்.அதனால் யாரையும் கொல்லமாட்டேன்  . தயவு செய்து என்னைத் திறந்து விடு. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்."என்று கெஞ்சியது.
அதைக்கேட்ட அந்தணர் மெதுவாக அருகே வந்தார்.புலி அவரைக் கெஞ்சியது " சத்தியமாக உன்னைக் கொல்ல மாட்டேன் கூண்டைத் திறந்து விடு."என்று சத்தியம் செய்தது.
அந்தணரோ புலியைப் பார்த்துப் பரிதாபப் பட்டார்.அதை நம்பினார் அதனால் கூண்டைத் திறந்து புலி யை வெளியே விட்டார்
உடனே புலி பாய்ந்து வெளியே  வந்தது. அந்த அந்தணர் மேல் தன முன்னங்கால்கள் இரண்டையும் வைத்துக் கடிக்க முயன்றது.அப்போது அந்தணர் பயந்து அலறினார்.
"ஏ, புலியே ,கொல்ல மாட்டேன் என்றாயே.சத்தியம் செய்தாயே இப்போது கொல்ல  வருகிறாயே"என்று நடுங்கியபடியே கூறினார்.
அதற்குப் புலி "நாந்தான் மனிதனைத் தின்பவனாயிற்றே.உன்னை விடுவேனா. எனக்கும் நல்ல பசி."என்றபடியே அவரைப் பிடித்துக் கடிக்கப் போயிற்று.
அப்போது அந்தணர் "இரு, யாரிடமாவது நியாயம் கேட்போம்.அவர்கள் சொல்வதைக் கேட்போம் என்றார். அப்போது ஒரு நரி அங்கு வந்தது.உடனே அந்தணர் "ஏ, புலியே இந்த நரியிடம் நியாயம் கேட்போம் "என்றார்.
புலியும் நரிதனக்கு ஏற்றாற்போலத்தான் நியாயம் சொல்லும் என்று நினைத்தது. அதனால் சரியென்றது. அந்தணர் ",ஏ, நரியாரே  எங்களுக்கு நியாயம் சொல்லு."என்றார்.
நரியும் சம்மதித்தது.நரியாரிடம் அந்தணர் விஷயத்தைச் சொல்லி 
"புலி கூண்டில் இருந்தது."என்றார்.புரிந்துகொண்ட ந ரி ஒன்றும் புரியாதது போல் பாசாங்கு செய்து,"என்ன என்ன அந்தணரே  நீர் சும்மா இரும். புலியாரே  நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?"என்று கேட்டது.
புலி பெருமையுடன் சொல்லத்  தொடங்கியது.
"நான் கூண்டுக்குள் இருந்தேனா," என்று சொன்னதை இடைமறித்த நரி,"என்ன என்ன எங்கு இருந்தீர்கள்?ஒன்றும் புரியவில்லையே" என்று பாசாங்கு செய்தது.உடனே புலி கூண்டுக்குள் சென்று நின்றுகொண்டு "இப்படித்தான் நின்று கொண்டிருந்தேன்"என்று 
கூறியது.
உடனே நரி அந்தணரைப்  பார்த்து "சீக்கிரம் போய்க்கதவைச் 
சாத்துமய்யா"என்று சொல்லவே அந்தணரும் ஒரே ஓட்டமாய் ஓடிக் கூண்டின் கதவைச் சாத்தினார்.
புலி திகைத்து நின்றது. நரி "ஓய் அந்தணரே , துஷ்டரைக் கண்டால் தூர விலகாமல் அதற்கு உதவுகிறீரே. வழியைப் பார்த்துக் கொண்டு போமய்யா",என்றது. 
அப்போது வேட்டைக்காரர்கள் வரும் சத்தம் கேட்கவே நரி ஓட்டமாக ஓடிவிட்டது அந்தணரும் துஷ்டரைக் கண்டால் தூர விலகுன்னு பெரியவங்க சொன்னதைப் புரிஞ்சிக்கிட்டேன் என்று சொல்லியவாறு தன வழியே நடந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, October 18, 2018

நட்டாற்றில் விட்ட கதை.

                        என் நண்பர் ஒருவர் தன மகளின் கல்யாணத்திற்காக வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கத்  தன மனைவியுடன் சென்றார். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள பெரிய கடையில் நுழைந்தனர். வெகுநேரம் மாற்றி மாற்றிப்   பார்த்துக் கடைசியில் ஒரு வழியாகப் பாத்திரங்களை பேக் செயது வாங்கி கொண்டு  பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.
                          வெகுநேரமாகிவிட்டதால் பசியில் இருவரும் களைத்துப் போயிருந்தனர்.இருந்தாலும் வாங்கிய பொருட்களை பற்றி பேசிக்கொண்டே வாகனம் நிறுத்திய இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.என் நண்பர் பேசிக்கொண்டே வந்தார். அவருக்குத் தன மனைவியின் மனம் திருப்தி அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.தன மனதுக்குள் தன்னைப் பாராட்டிக் கொண்டார். அந்த மகிழ்ச்சியில் வண்டியைச் செலுத்தினார். "இத்தனை வருஷம் கழிச்சாவது உன் மனசு  சந்தோஷப் பட்டுச்சே   அதுதான் எனக்கும் திருப்தி என்ன சொல்றே?"என்றவருக்கு தன மனைவி ஏதும் பேசாமல் வருவது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் தன மனைவி வாயினாலேயே தன்னைப் பற்றிய பெருமையைக் கேட்க வேண்டுமென்று தோன்றியதோ என்ன்வோசற்றே அதட்டலாக "ஏய் 
என்ன நீ எதுவும் பேசாமலேயே வருகிறாய்?இப்பக்கூட உனக்கு ஒத்துக்க முடியலையா?"என்றவர் சற்றே திரும்பிப் பார்த்தவர் திடுக்கிட்டார்.
பின்னால் அமர்ந்திருந்த மனைவியைக் காணோம்.சட்டென்று வண்டியை .நிறுத்திக் கீழே இறங்கினார்.ஒரு நிமிடம் யோசித்தார் 
பாரிமுனையில் இருந்து எழும்பூர் தாண்டி வந்திருந்தார்.உடனே  தொலைத்த இடத்தில் தேடவேண்டும் என்ற பொன்மொழி நினைவுக்கு வர வண்டியைத் திருப்பிக் கொண்டு பாரிமுனை நோக்கிச் சென்றார்.சற்றுத் தொலைவிலேயே பேருந்து நிறுத்தத்தில் மனைவி நிழலுக்கு ஒதுங்கியவராய் அமர்ந்திருப்பது தெரிந்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
கணவர் அருகில் வந்ததும்  அவர் மனைவி ,"எங்க, இப்படி நட்டாத்தில விட்டுட்டுப் போவணும்னு எத்தனை நாளா பிளான் போட்டீங்க?எனக்கு வழியும் தெரியாது வாய்க்காலும் தெரியாது"என்றார் சற்றே கடுப்போடு..     "நல்ல வேளை  விட்டுட்டுப் போன இடத்துலே உக்காந்திருந்தியே 
அதுவரைக்கும் சந்தோஷம்.ஏறு  வண்டியில "என்று அதட்டியவர் 
அவர் நன்கு அமர்ந்துள்ளாரா எனத்தெரிந்துகொண்டு வண்டியை 
ஓட்டினார். வழியெங்கும் இருவரும் பேசவில்லை.
        வீடு  வந்து  தன மகளிடம் "உன் கல்யாணம் உனக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்படி."
என்று சொன்னபோது தன கவனக்குறைவை  நினைத்துச் சிரித்துக் கொண்டாராம் என் நண்பர்.இதை அவரே சுவைப்படச் சொன்னபோது நாங்களும்  விழுந்து விழுந்து சிரித்தோம் வேறு என்ன செய்வது?









யி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 22, 2018

greetings

நல்வாழ்த்துக்கள் 
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: துணிவு வேண்டும்



---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 22 Sep 2018 at 19:30
Subject: துணிவு வேண்டும்
To: <rukmani68sayee.manimani@blogger.com>


             ஒருமுறை நாங்கள் குடும்பத்துடனும் உறவினர் சம்பந்தி குடும்பம் என பதினைந்து பேர் ஒரு தனி வண்டியில் திருச்சிக்குச் சென்றிருந்தோம் நாங்கள் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போதே இரவு நேரமாகிவிட்டது. 
           நங்கள் திருச்சியை விட்டே வெளியேறவில்லை. ஆனால் 
அதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது.நான்கு தெருக்கள் சேரும் பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பீப் பீப் என கத்திக் கொண்டிருந்தனவே தவிர யாரும் யாருக்கும் வழி விடுவதாகத் தெரியவில்லை.
            எங்கள் வண்டியின் முன்பாகவும் பின்பாகவும் வாகனங்கள் 
வந்து நின்றன.வண்டிக்குள் இருந்த நாங்களோ  காதுகளைப்  பொத்திக் கொண்டோம்.நேரம் ஆகா ஆகா சத்தமும் வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.வழிகாட்டும் போலீசோ சட்டம் பாதுகாப்புக்கொடுக்கும் போலீசோ யாரையும் காணோம்.
             கிட்டாத தட்ட பத்து நிமிடங்களாகியிருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு அவசர படுகிறார்கள் யாராவது சரியாக வழிவிட்டால் வண்டிகள் நகரும் என்று நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் தம்பி சட்டென 
 வண்டியை வீட்டுக் கீழே இறங்கினார் அவருடன் எங்கள் மாப்பிள்ளையும் இறங்கினார் இருவருமே ஆறடி உயரம் கிருதா மீசை நல்ல சிவந்த நிறத்துடன் இருப்பார்கள் அன்று இருவருமே தூய வெண்மை நிறப்  பேண்டும் ஷர்ட்டும் அணிந்து கருப்பு பெல்ட் அணிந்திருந்தனர்.
ஒருவர் நடுப்பகுதியில் நிற்க மற்றவர் கை  அசைத்து வண்டி போகக் கட்டளையிட்டார் அவர் கைகாட்டிய  திசையில் முதல் வண்டி நகர்ந்தது.கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் அந்த இடமே காலியாகிவிட்டது. கடமையை முடித்து போக்குவரத்தைச் சரிசெய்தவர்கள் இருவரும் தங்கள் வண்டியில் அமர எங்கள் வண்டியும் புறப்பட்டது.நாங்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.
எங்கள் உடன் அமர்ந்திருந்த அவர்களின் தாயாரைப் பார்த்து நாங்கள் பெருமைப் பட்டோம்.எங்கள் மாப்பிள்ளையையும் அவர் தம்பியையும் வாய் நிறைய பாராட்டி சரியான நேரத்தில் துணிவைக் காட்டிய அவர்களின் சமயோசித புத்தியையும் பாராட்டி நன்றியும் சொன்னோம்.
நம் இளைஞர்கள் இதுபோல் இருந்தால் நம் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

-------------------------------------------------------------------------------------------------------























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

துணிவு வேண்டும்

             ஒருமுறை நாங்கள் குடும்பத்துடனும் உறவினர் சம்பந்தி குடும்பம் என பதினைந்து பேர் ஒரு தனி வண்டியில் திருச்சிக்குச் சென்றிருந்தோம் நாங்கள் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போதே இரவு நேரமாகிவிட்டது. 
           நங்கள் திருச்சியை விட்டே வெளியேறவில்லை. ஆனால் 
அதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது.நான்கு தெருக்கள் சேரும் பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பீப் பீப் என கத்திக் கொண்டிருந்தனவே தவிர யாரும் யாருக்கும் வழி விடுவதாகத் தெரியவில்லை.
            எங்கள் வண்டியின் முன்பாகவும் பின்பாகவும் வாகனங்கள் 
வந்து நின்றன.வண்டிக்குள் இருந்த நாங்களோ  காதுகளைப்  பொத்திக் கொண்டோம்.நேரம் ஆகா ஆகா சத்தமும் வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.வழிகாட்டும் போலீசோ சட்டம் பாதுகாப்புக்கொடுக்கும் போலீசோ யாரையும் காணோம்.
             கிட்டாத தட்ட பத்து நிமிடங்களாகியிருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு அவசர படுகிறார்கள் யாராவது சரியாக வழிவிட்டால் வண்டிகள் நகரும் என்று நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் தம்பி சட்டென 
 வண்டியை வீட்டுக் கீழே இறங்கினார் அவருடன் எங்கள் மாப்பிள்ளையும் இறங்கினார் இருவருமே ஆறடி உயரம் கிருதா மீசை நல்ல சிவந்த நிறத்துடன் இருப்பார்கள் அன்று இருவருமே தூய வெண்மை நிறப்  பேண்டும் ஷர்ட்டும் அணிந்து கருப்பு பெல்ட் அணிந்திருந்தனர்.
ஒருவர் நடுப்பகுதியில் நிற்க மற்றவர் கை  அசைத்து வண்டி போகக் கட்டளையிட்டார் அவர் கைகாட்டிய  திசையில் முதல் வண்டி நகர்ந்தது.கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் அந்த இடமே காலியாகிவிட்டது. கடமையை முடித்து போக்குவரத்தைச் சரிசெய்தவர்கள் இருவரும் தங்கள் வண்டியில் அமர எங்கள் வண்டியும் புறப்பட்டது.நாங்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.
எங்கள் உடன் அமர்ந்திருந்த அவர்களின் தாயாரைப் பார்த்து நாங்கள் பெருமைப் பட்டோம்.எங்கள் மாப்பிள்ளையையும் அவர் தம்பியையும் வாய் நிறைய பாராட்டி சரியான நேரத்தில் துணிவைக் காட்டிய அவர்களின் சமயோசித புத்தியையும் பாராட்டி நன்றியும் சொன்னோம்.
நம் இளைஞர்கள் இதுபோல் இருந்தால் நம் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

-------------------------------------------------------------------------------------------------------























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com