Thursday, October 18, 2018

நட்டாற்றில் விட்ட கதை.

                        என் நண்பர் ஒருவர் தன மகளின் கல்யாணத்திற்காக வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கத்  தன மனைவியுடன் சென்றார். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள பெரிய கடையில் நுழைந்தனர். வெகுநேரம் மாற்றி மாற்றிப்   பார்த்துக் கடைசியில் ஒரு வழியாகப் பாத்திரங்களை பேக் செயது வாங்கி கொண்டு  பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.
                          வெகுநேரமாகிவிட்டதால் பசியில் இருவரும் களைத்துப் போயிருந்தனர்.இருந்தாலும் வாங்கிய பொருட்களை பற்றி பேசிக்கொண்டே வாகனம் நிறுத்திய இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.என் நண்பர் பேசிக்கொண்டே வந்தார். அவருக்குத் தன மனைவியின் மனம் திருப்தி அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.தன மனதுக்குள் தன்னைப் பாராட்டிக் கொண்டார். அந்த மகிழ்ச்சியில் வண்டியைச் செலுத்தினார். "இத்தனை வருஷம் கழிச்சாவது உன் மனசு  சந்தோஷப் பட்டுச்சே   அதுதான் எனக்கும் திருப்தி என்ன சொல்றே?"என்றவருக்கு தன மனைவி ஏதும் பேசாமல் வருவது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் தன மனைவி வாயினாலேயே தன்னைப் பற்றிய பெருமையைக் கேட்க வேண்டுமென்று தோன்றியதோ என்ன்வோசற்றே அதட்டலாக "ஏய் 
என்ன நீ எதுவும் பேசாமலேயே வருகிறாய்?இப்பக்கூட உனக்கு ஒத்துக்க முடியலையா?"என்றவர் சற்றே திரும்பிப் பார்த்தவர் திடுக்கிட்டார்.
பின்னால் அமர்ந்திருந்த மனைவியைக் காணோம்.சட்டென்று வண்டியை .நிறுத்திக் கீழே இறங்கினார்.ஒரு நிமிடம் யோசித்தார் 
பாரிமுனையில் இருந்து எழும்பூர் தாண்டி வந்திருந்தார்.உடனே  தொலைத்த இடத்தில் தேடவேண்டும் என்ற பொன்மொழி நினைவுக்கு வர வண்டியைத் திருப்பிக் கொண்டு பாரிமுனை நோக்கிச் சென்றார்.சற்றுத் தொலைவிலேயே பேருந்து நிறுத்தத்தில் மனைவி நிழலுக்கு ஒதுங்கியவராய் அமர்ந்திருப்பது தெரிந்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
கணவர் அருகில் வந்ததும்  அவர் மனைவி ,"எங்க, இப்படி நட்டாத்தில விட்டுட்டுப் போவணும்னு எத்தனை நாளா பிளான் போட்டீங்க?எனக்கு வழியும் தெரியாது வாய்க்காலும் தெரியாது"என்றார் சற்றே கடுப்போடு..     "நல்ல வேளை  விட்டுட்டுப் போன இடத்துலே உக்காந்திருந்தியே 
அதுவரைக்கும் சந்தோஷம்.ஏறு  வண்டியில "என்று அதட்டியவர் 
அவர் நன்கு அமர்ந்துள்ளாரா எனத்தெரிந்துகொண்டு வண்டியை 
ஓட்டினார். வழியெங்கும் இருவரும் பேசவில்லை.
        வீடு  வந்து  தன மகளிடம் "உன் கல்யாணம் உனக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்படி."
என்று சொன்னபோது தன கவனக்குறைவை  நினைத்துச் சிரித்துக் கொண்டாராம் என் நண்பர்.இதை அவரே சுவைப்படச் சொன்னபோது நாங்களும்  விழுந்து விழுந்து சிரித்தோம் வேறு என்ன செய்வது?









யி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 22, 2018

greetings

நல்வாழ்த்துக்கள் 
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: துணிவு வேண்டும்



---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 22 Sep 2018 at 19:30
Subject: துணிவு வேண்டும்
To: <rukmani68sayee.manimani@blogger.com>


             ஒருமுறை நாங்கள் குடும்பத்துடனும் உறவினர் சம்பந்தி குடும்பம் என பதினைந்து பேர் ஒரு தனி வண்டியில் திருச்சிக்குச் சென்றிருந்தோம் நாங்கள் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போதே இரவு நேரமாகிவிட்டது. 
           நங்கள் திருச்சியை விட்டே வெளியேறவில்லை. ஆனால் 
அதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது.நான்கு தெருக்கள் சேரும் பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பீப் பீப் என கத்திக் கொண்டிருந்தனவே தவிர யாரும் யாருக்கும் வழி விடுவதாகத் தெரியவில்லை.
            எங்கள் வண்டியின் முன்பாகவும் பின்பாகவும் வாகனங்கள் 
வந்து நின்றன.வண்டிக்குள் இருந்த நாங்களோ  காதுகளைப்  பொத்திக் கொண்டோம்.நேரம் ஆகா ஆகா சத்தமும் வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.வழிகாட்டும் போலீசோ சட்டம் பாதுகாப்புக்கொடுக்கும் போலீசோ யாரையும் காணோம்.
             கிட்டாத தட்ட பத்து நிமிடங்களாகியிருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு அவசர படுகிறார்கள் யாராவது சரியாக வழிவிட்டால் வண்டிகள் நகரும் என்று நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் தம்பி சட்டென 
 வண்டியை வீட்டுக் கீழே இறங்கினார் அவருடன் எங்கள் மாப்பிள்ளையும் இறங்கினார் இருவருமே ஆறடி உயரம் கிருதா மீசை நல்ல சிவந்த நிறத்துடன் இருப்பார்கள் அன்று இருவருமே தூய வெண்மை நிறப்  பேண்டும் ஷர்ட்டும் அணிந்து கருப்பு பெல்ட் அணிந்திருந்தனர்.
ஒருவர் நடுப்பகுதியில் நிற்க மற்றவர் கை  அசைத்து வண்டி போகக் கட்டளையிட்டார் அவர் கைகாட்டிய  திசையில் முதல் வண்டி நகர்ந்தது.கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் அந்த இடமே காலியாகிவிட்டது. கடமையை முடித்து போக்குவரத்தைச் சரிசெய்தவர்கள் இருவரும் தங்கள் வண்டியில் அமர எங்கள் வண்டியும் புறப்பட்டது.நாங்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.
எங்கள் உடன் அமர்ந்திருந்த அவர்களின் தாயாரைப் பார்த்து நாங்கள் பெருமைப் பட்டோம்.எங்கள் மாப்பிள்ளையையும் அவர் தம்பியையும் வாய் நிறைய பாராட்டி சரியான நேரத்தில் துணிவைக் காட்டிய அவர்களின் சமயோசித புத்தியையும் பாராட்டி நன்றியும் சொன்னோம்.
நம் இளைஞர்கள் இதுபோல் இருந்தால் நம் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

-------------------------------------------------------------------------------------------------------























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

துணிவு வேண்டும்

             ஒருமுறை நாங்கள் குடும்பத்துடனும் உறவினர் சம்பந்தி குடும்பம் என பதினைந்து பேர் ஒரு தனி வண்டியில் திருச்சிக்குச் சென்றிருந்தோம் நாங்கள் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போதே இரவு நேரமாகிவிட்டது. 
           நங்கள் திருச்சியை விட்டே வெளியேறவில்லை. ஆனால் 
அதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது.நான்கு தெருக்கள் சேரும் பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பீப் பீப் என கத்திக் கொண்டிருந்தனவே தவிர யாரும் யாருக்கும் வழி விடுவதாகத் தெரியவில்லை.
            எங்கள் வண்டியின் முன்பாகவும் பின்பாகவும் வாகனங்கள் 
வந்து நின்றன.வண்டிக்குள் இருந்த நாங்களோ  காதுகளைப்  பொத்திக் கொண்டோம்.நேரம் ஆகா ஆகா சத்தமும் வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.வழிகாட்டும் போலீசோ சட்டம் பாதுகாப்புக்கொடுக்கும் போலீசோ யாரையும் காணோம்.
             கிட்டாத தட்ட பத்து நிமிடங்களாகியிருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு அவசர படுகிறார்கள் யாராவது சரியாக வழிவிட்டால் வண்டிகள் நகரும் என்று நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் தம்பி சட்டென 
 வண்டியை வீட்டுக் கீழே இறங்கினார் அவருடன் எங்கள் மாப்பிள்ளையும் இறங்கினார் இருவருமே ஆறடி உயரம் கிருதா மீசை நல்ல சிவந்த நிறத்துடன் இருப்பார்கள் அன்று இருவருமே தூய வெண்மை நிறப்  பேண்டும் ஷர்ட்டும் அணிந்து கருப்பு பெல்ட் அணிந்திருந்தனர்.
ஒருவர் நடுப்பகுதியில் நிற்க மற்றவர் கை  அசைத்து வண்டி போகக் கட்டளையிட்டார் அவர் கைகாட்டிய  திசையில் முதல் வண்டி நகர்ந்தது.கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் அந்த இடமே காலியாகிவிட்டது. கடமையை முடித்து போக்குவரத்தைச் சரிசெய்தவர்கள் இருவரும் தங்கள் வண்டியில் அமர எங்கள் வண்டியும் புறப்பட்டது.நாங்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.
எங்கள் உடன் அமர்ந்திருந்த அவர்களின் தாயாரைப் பார்த்து நாங்கள் பெருமைப் பட்டோம்.எங்கள் மாப்பிள்ளையையும் அவர் தம்பியையும் வாய் நிறைய பாராட்டி சரியான நேரத்தில் துணிவைக் காட்டிய அவர்களின் சமயோசித புத்தியையும் பாராட்டி நன்றியும் சொன்னோம்.
நம் இளைஞர்கள் இதுபோல் இருந்தால் நம் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

-------------------------------------------------------------------------------------------------------























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, October 20, 2017

Fwd: தகப்பன்சாமி


---------- Forwarded message ----------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: 2017-10-17 12:41 GMT+05:30
Subject: தகப்பன்சாமி
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>



ஒருமுறை நாங்கள் ரயிலில் மதுரை அருகே உள்ள எங்கள் கிராமத்திற்குச்  சென்று கொண்டிருந்தோம்.வழக்கம்போல ரயிலில் கூட்டமாகத்தான் இருந்தது.எங்கள் எதிரே ஒரு சிறுவன் வயது ஆறு இருக்கும் தன பெற்றோருடன் அமர்ந்திருந்தான்.அப்போது தரையில் இருக்கும் குப்பையைப் பெருக்கியவாரே ஒரு சிறுவன் வந்தான் ஒவ்வொருவரிடமும் கைநீட்டினான். அந்த சிறுவனின் தந்தையிடம் கை  நீட்டிய போது இல்லையென்று கையை விரித்தார்.
அவனும் நகர்ந்து விட்டான்.

அப்போது ஒரு பலூன் விற்பவர் நிறைய பலூன்களை கையில் வைத்தபடி சிறு குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வெகுநேரம் நின்று வியாபாரம் செய்தார்.எங்களிடமும் வந்து நின்று கொண்டார். வெகுநேரம் சும்மாயிருந்த பையன் "அப்பா, பலூன்" என்று கேட்க ஆரம்பித்தான்.அவன் தந்தையும்"தெரியுமே, இன்னும் கேட்கலையேன்னு நெனச்சேன்.''என்றபடி பையைத் துழாவி ஒருரூபாய் நாணயத்தை எடுத்து பையன் கையில் கொடுத்தார்.வியாபாரி சந்தோஷமாக ஒரு பலூனை எடுத்து ஊதத் தொடங்கினார்.பையன் அவரைத் தள்ளிக் கொண்டு ஓடி  பெருக்கிக் கொண்டு செல்லும் பையனிடம் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்துப் புன்னகைத்து  விட்டு மீண்டும் வந்து தன்னிடத்தில் உட்கார்ந்தான்.
அப்போதுதான் நான் அந்தஏழைச் சிறுவனைப் பார்த்தேன். இரண்டு கால்களும் சூம்பி இருந்தன.அவனுக்கு கொடுக்கவேண்டியது அவசியம் என்று ஆறுவயது சிறுவனுக்குத் தெரிந்திருக்கிறது. 
அவன் தந்தை தன மகனின் செயலை ஆதரிப்பதுபோல அவனைத் தடவிக் கொடுத்தார்.
இதைப் பார்த்த  எனக்கு இருபது  ஆண்டுகளுக்கு முன் என் மகள் சிறிய பெண்ணாக  அநேகமாக இதே ஆறு வயதுதான் இருக்கும் .பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.அப்போது ஏதோ ஓர் இடத்தில் பேருந்து நின்றுகொண்டிருந்தது.
திடீரென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மகள் அழ ஆரம்பித்தாள்.ஏனம்மா அழுகிறாய் என்று பலமுறை கேட்டபிறகு அழுகையை நிறுத்தியவள்  "வெளியே ஒரு அண்ணா என்கிட்டே காசு கேட்டுச்சு என்கிட்டேதான் காசே இல்லையே என்ன சேய்வேன் ?"என்றவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள் நாங்கள் சிரித்தபடி அந்தப் பையனை அழைத்து என் மகள் கையில் காசை க் கொடுக்கச் சொன்னோம் பெற்றுக் கொண்ட சிறுவனின் புன்னகையைப் பார்த்து என் மகளும் சிரித்தாள்.ஏழையின் சிரிப்பில் இறைவனையேஅன்று   நாங்கள் பார்த்தோம் .
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, June 27, 2017

 
                                         
-----எதிர்பாரா மருந்து.;   ஒருநாள்   எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு
அப்பாடா என்று தலையை தலையணையில்  வைத்தேன்.திடீரென்று  என் மகன்   வீர் வீரென்று அழ ஆரம்பித்தான்.பதறிய  அவனைத் தூக்கி சமாதானம் செயது பால்  கொடுத்தேன் ஆனால் பாலைத் துப்பிவிட்டு அழ ஆரம்பித்தான்.
தோளில்  போட்டுத் தட்டியும் வேடிக்கை காட்டியும் பயனில்லை.வீட்டில் அனைவரும் எழுந்துவிட்டனர்.இரவு பன்னிரெண்டைத் தாண்டி விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர் வீட்டுக்கு ஓடினோம். அவரும் குழந்தையைப் பார்த்துவிட்டு உடலில் எந்த குறையும் தெரியவில்லை.பால் கொடுத்துத் தூங்க வையுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
மணி ஒன்றைத் தாண்டிவிட்டது.அக்கம்பக்கம் அனைவரும் எழுந்து ஆளாளுக்கு ஆலோசனை சொல்லத தொடங்கினர்.எனக்கு அழுகையே வந்து விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.குழந்தையின் உடல் வேர்த்து நனைந்து விட்டது.என்னால் நிற்க முடியாமல் உடல் தளர்ந்து விட்டேன்  அப்படியே உட்கார்ந்து குழந்தையை மடியில் கிடத்தினேன் குப்புறப் படுக்க வைத்துத் தட்டினேன்.அப்போது என் மாமியார் அருகே வந்து குழந்தையின் பின் புறத்தைத் தட்டிக் கொடுத்தார்.என்ன மாயமோ குழந்தையின் அழுகை சற்றுக் குறையவே மாமியார் குழந்தையின் அடிமுதுகில் விளக்கு வைத்துப் பார்த்தார் ஏதோ பூச்சிக் கடி பொரிப்பொரியாய்த் தென்பட்டது.
என் மாமியார் உடனே ஒரு வெள்ளைப் பூண்டை எடுத்து கையால் நசுக்கி பூச்சிக்கடித்த இடத்தில் தேய்த்து விட்டார்.அடுத்த நிமிஷமே குழந்தை அயர்ந்து தூங்க ஆரம்பித்தான்.அப்போதுதான் இரவு படுக்கப் போகுமுன் என் மாமியார் அடுத்தநாள் சமையலுக்காக பூண்டு உரித்த கையைத் தான் குழந்தையின் பின்புறத்தில்  தடவிக் கொடுத்திருக்கிறார்.அந்த மருந்து பட்டு அரிப்பு குறைந்திருக்கிறது.
எப்படியோ இரண்டுமணிக்கேனும் தூங்க முடிந்ததே என்று நானும் படுக்கையில் சாய்ந்தேன்.

Friday, March 17, 2017

மொட்டைத் தலையும் முழங்காலும்

                  இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் காது வலியில் துடித்துக் கொண்டிருந்தேன்.அடிக்கடி காது மடலில் வலி வந்து ஒரு நாள் முழுதும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தேன். சைனஸ் என்று மூன்று மாதம் வைத்தியம், அதன் பின் இஎன்டி இடம் வைத்தியம், அதன் பின் ஸ்கின் 
டாக்டரைப் பார்க்கச் சொன்னதால் அவரிடமும் வைத்தியம் பார்த்தும் வலி வந்துகொண்டுதான் இருந்தது.வேறு ஒரு இஎன்டி டாக்டர் ஸ்கேன் செய்யச் சொன்னார். அதிலும் எந்தக் குறையும் தெரியவில்லை.எனக்கு மட்டும் என் உள்ளுணர்வு ஏதோ பெரிய பாதிப்பு என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
உறவினர் எல்லாம் இது நரம்பு சம்பந்தமானது. என்றதால் நரம்பு டாக்டரையும் பார்த்து வைத்தியம் செய்தும் பலனில்லை. 
      
                 இனி இறைவனே கதி என்று கோவில்களுக்குச் சென்று முறையிடத் தொடங்கினேன்.எங்களின்  பஜனை கோஷ்டியுடன் கரூர் தான்தோன்றிமலை கிரிவலம் செய்து ஊர் திரும்பினேன் மாம்பலம் ரயிலடியில்  அதிகாலையில் வந்து இறங்கிய என்னால் நடக்கவோ மூச்சு விடவோ முடியவில்லை. இறைவா என்னை வீட்டில் சேர்த்துவிடு  அதுவரை காத்திரு என்று வேண்டிக் கொண்டபோது என் உடன் வந்த தோழி அவர்கள் காரில் என்னைக் கொண்டுபோய் வீட்டு வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றாள் 

               வீட்டுக்குள் நுழைந்த என்னைப்  பார்த்த என் மகள் திகைத்தாள். முகம் கால்கள் எல்லாம் வீங்கிப் போயிருந்தன.படுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டாள்  விடிந்ததும் மருத்துவமனை சென்றோம் அங்கும் பழையகுருடி கதவைத் திறடி கதைதான்.ஒருநாள் முழுவதும் ஜெனரல் டாக்டர் நரம்பு டாக்டர், இதயம் பார்க்கும் டொக்டர் எல்லா டெஸ்டும் பார்த்தபின் சிறுநீரக சம்பந்தமான டாக்டரைப் பார்க்கச் சொல்லவே சரி அவரையும் பார்த்துவிடுவோம் என்று அங்கும் சென்றோம்.

                  "உங்கள் கிட்னி பழுதடைந்துள்ளது.அதனால்தான் ரத்த அழுத்தம் இவ்வளவு அதிகமாக உள்ளது.உடம்பு வீக்கமும் அதனால்தான்." என்றவர் தொடர்ந்து உங்கள் கிட்னி  பழுதானதைத்தான்  கால்முகம் வீக்கம் காட்டிக் கொடுத்துள்ளது.உணவில் உப்பில்லாமல் பத்தியமாகச் சாப்பிடுங்கள் நீர் அரைலீட்டருக்குமேல் சாப்பிட வேண்டாம்.எல்லா காய்களையும் வேகவைத்து வடிகட்டி சாப்பிடுங்கள்.
கீரை தேங்காய் ,நெய்  எண்ணையில் பொறி த்தது எல்லாம் விலக்கிவிடுங்கள்."என்று சொல்லக் சொல்ல என் மனம் என்ன பாடு பட்டது என்பதை சொல்ல முடியாது.

                     இன்ன உடம்பு என காட்டிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி டாக்டர் சொன்னபடியே பத்தியமாக இருந்து மருந்து சாப்பிட்டு ஒரே மாதத்தில் வீக்கம் குறைந்து ஓரளவு ரத்த அழுத்தமும் குறைந்தது.
இப்போது மூன்று மாதங்களாக காது வலியும் வருவதில்லை.என்னைப்  பார்க்க என் உறவினர் ஒருவர் வந்திருந்தார்.அவர் அக்குபஞ்சர் வைத்தியம் செய்து கொள்பவர்.அவரிடம் பேசியபோது அவருக்கு வைத்தியம் செய்பவர் காதுக்கும் கிட்னிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னாராம்.முன்னரே தெரிந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிட்னி பரிசோ தனை செய்துகொண்டிருப்பேன்.என்ன செய்வது இரண்டு ஆண்டுகள் வலயில் தவித்ததோடு என்னவென்றே தெரியாமல் தவித்த தவிப்புதான் அதிகம்.இனி யாருக்கேனும் காது மடலைச் சுற்றி நரம்பில் வலி ஏற்பட்டால் உடனே உங்கள் கிட்னி சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என் இந்த அனுபவம் மற்றவருக்கும் பயன்படட்டும் என்றே இதை எழுதியுள்ளேன்.

தற்போது பத்தியமாகசாப்பிட்டு குறைவாக நீர் அருந்தி ஓரளவு  நன்றாகவே இருக்கிறேன்.
வாயைக் கட்டினால்  நோயைக் கட்டலாம் என்பது இப்போது எனக்குப் பொருத்தமாக இருக்கிறது..






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com