Tuesday, April 5, 2016

puriyaadha pudhir

    புரியாத புதிர்.

குழந்தைகளின் அழுகை என்று நினைக்கும் போதே தெனாலிராமனின் கதைதான் நினைவுக்கு வரும்.தானே குழந்தையாக மாறி ராயரை அந்தக் குழந்தையை சமாதானம் செய்யச் சொன்ன கதை அனைவரும் அறிந்ததே.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் என் மகன் பத்துமாதக் குழந்தையாக இருந்தான்.ஒருநாள் இரவு சுமார் எட்டு மணி இருக்கும் நங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.திடீரென படுத்திருந்த குழந்தை அழ ஆரம்பித்தான்.நான் வேகமாக எழுந்து பால் கொடுத்தேன். ஆனாலும் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தான்.என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையைத் தோளில் போட்டுத் தூங்க வைக்க முயன்றேன்.
ஆனாலும் அழுகை அதிகரித்து குழந்தையின் உடம்பு வியர்வையில் நனைந்து விட்டது.மணி பதினொன்றைத் தாண்டிவிடவே மூன்று மணி நேரமாக அழுவதால் ஏதோ பெரிய பாதிப்பு எனத் தோன்றவே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரின் வீட்டுக்குச் சென்றோம் பாதி இரவு டாக்டரின்
வீட்டுக் கதவைத் தட்டி அவரிடம் அழும் குழந்தையைக் காட்டினோம். எனக்கு பயத்திலும் அவ்வளவு நேரம் அழும் குழந்தையைசமாதானப் படுத்தியதால் வந்த களைப்பினாலும் அழுகையே வந்து விட்டது.
  1. அந்தமருத்துவர் குழந்தையை கீழே படுக்கவைத்து பரிசோதித்தார்.பின் ''குழந்தைக்குப் பசியாக இருக்குமோ என்னவோ பால் கொடுத்தீர்களா?''என்றபோது நான் அநேகமாக அழவே தொடங்கிவிட்டேன்.இன்னும் நன்றாக குழந்தையை ஆராய்ந்த பின் குழந்''தைக்கு எந்தத் தொந்தரவும் இருப்பதாகத் தெரியவில்லையே.தொட்டிலில் கிடத்தி ஆட்டிப் பாருங்கள்''என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். நாங்கள் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம் நான் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தேன்.அழும் குழந்தையை என் மடியில் போட்டுத் தட்டிக் கொண்டே அமர்ந்தேன்.அவன் பிட்டப் பகுதியில் சிறு சிறு வேர்க்குரு போல் தோன்றியதைப் பார்த்து திடுக்கிட்டேன். அந்த பாதிராத்திரியில் யாரிடம் சென்று மருந்து கேட்பது. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வீட்டில் இருந்த வெள்ளைப் பூண்டு ஒன்றை எடுத்து நசுக்கி அந்த பகுதியில் வைத்துத் தேய்த்தேன்.அடுத்த வினாடி மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம்போல் அமைதியாக இருந்ததோடு ஒரே நிமிஷத்தில் தூங்கியும் போனான். அப்போதுதான் தெரிந்தது ஏதோ பூச்சி அவன் பின் பகுதியில் கடித்துள்ளது என்ற செய்தி  
  •          வாய் பேசத் தெரியாத குழந்தைக்கு இப்படி ஏதேனும் கஷ்டம் வந்தால் அது அவர்களை விட நமக்குத்தான் துன்பம் அதிகம் மனஉளைச்சல் என்பது எத்துனை பெரிய கஷ்டம்?
    1. இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான் இதை இங்கு தெரிவித்துள்ளேன்.






      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      2 comments:

      1. Replies
        1. மிகவும் பயனுள்ள பதிவு.

          சொல்லத்தெரியாத பேசத்தெரியாத சின்னக்குழந்தைகளின் அழுகைக்கான மூல காரணத்தை நாம் கண்டு அறிவதில்தான் நம் திறமையே உள்ளது.

          அனுபவத்தின் மூலமே இதையெல்லாம் நாம் அறிய முடியும். பகிர்வுக்கு நன்றிகள்.

          Delete