Friday, June 3, 2011

எனது குறிக்கோள்

அன்பு நெஞ்சங்களே உங்கள் அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி உங்களுடன் மனம் விட்டுப் பேச வந்துள்ளேன் பாட்டி சொல்லும் கதைகள் மூலமாக இளம் தளிர்களுடன் பேசிவந்த நான் இப்போது என்மனதில் நிறைந்துள்ள எண்ணங்களை சிந்தனைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

எனவே இந்த இரண்டாவது தளத்தை உருவாக்கியுள்ளேன்.இந்த தளத்தின் மூலமாக நான் ரசித்த என்னை பாதித்த என்னைத் திருத்திய காட்சிகள் நிகழ்ச்சிகள் புத்தகங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.எனது இந்த அனுபவங்கள் உங்களையும் பண்படுத்தும் என நம்புகிறேன்.தொடர்ந்து படித்து உங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

ருக்மணி சேஷசாயி.

1 comment:

  1. வாழ்த்துகள்... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அது உதவியாய் இருக்கும்....

    ReplyDelete